இலங்கையில் குழந்தைகளுக்கு பரவும் புதியவகை தொற்று..! 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்கும்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் குழந்தைகளுக்கு பரவும் புதியவகை தொற்று..! 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்கும்..

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் ஒருவகை தொற்று நோய் பரவி வருவதாக சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்திருக்கின்றார். 

எண்டி புட்டி மவுத் டிசிஸ் என அறியப்படும் இந்த நோய், 6 மாதம் முதல் 5 வயது சிறுவர்களுக்கு ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், உடல் வலி, கைகள், கால்கள் மற்றும் வாயில் சிவப்பு புள்ளிகள் ஏற்படல் ஆகியன இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.

இது ஒரு பிள்ளையிடம் இருந்து மற்றுமொரு பிள்ளைக்கு தொற்ற கூடியது என வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு