கொடிகாமம் சந்தை முடக்கப்பட்டது..! வியாபாரிகளுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை, தொற்று நீக்கவும் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
கொடிகாமம் சந்தை முடக்கப்பட்டது..! வியாபாரிகளுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை, தொற்று நீக்கவும் நடவடிக்கை..

யாழ்.கொடிகாமம் மரக்கறி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சந்தை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை சுகாதார பிரிவினரால் சந்தை முடக்கப்பட்டிருப்பதுடன், தொற்று நீக்கம் செய்யப்பட்டு சந்தையில் உள்ள ஏனைய வர்த்தகர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதடன் பீ.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில் 

சந்தையை மீளவும் திறப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும். என சுகாதார பிரிவனர் தொிவித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு