பிரதமர் மஹிந்தவின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து நட்டு வளர்க்கப்பட்ட மரத்தை வெட்டி எறிந்த அதிகாரிகள்! விடயம் அம்பலமானதால் சிக்கல்..

ஆசிரியர் - Editor I
பிரதமர் மஹிந்தவின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து நட்டு வளர்க்கப்பட்ட மரத்தை வெட்டி எறிந்த அதிகாரிகள்! விடயம் அம்பலமானதால் சிக்கல்..

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் இந்நாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்பு ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு முன்னால் நாட்டிய மரத்தினை பிரதேச செயலக அதிகாரிகள் வெட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதம செயலாளர் அலுவலகத்தின் நிர்வாக் கிளைக்குச்  சொந்தமானகேப் ரக வாகனத்தில் வருகை தந்த அதிகாரிகளே இவ்வாறு மரத்தை வெட்டி உள்ளனர்.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி மட்டக்களப்பு ஸ்ரீ முருகன் ஆலய நிர்வாகத்தினர் மட்டக்களப்பு மாவட்ட வனவளத் திணைக்களத்திற்கும் ஆளுநர் அலுவலகத்துக்கும் எழுத்து மூலம் கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு