நாட்டிலுள்ள சகல மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும், பிரதேச செயலர்களுக்கும் பெளத்த அலுவல் ஆணையாளர் பதவி..

ஆசிரியர் - Editor I
நாட்டிலுள்ள சகல மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும், பிரதேச செயலர்களுக்கும் பெளத்த அலுவல் ஆணையாளர் பதவி..

இலங்கையில் உள்ள சகல மாவட்ட செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்களுக்கு பெளத்த அலுவல்கள் ஆணையாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

2021-03-19ஆம் திகதிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரமும் 2021-02-23ம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரமும்,

இந்த நியமனம் மாவட்டச் செயலாளர்களிற்கும், பிரதேச செயலாளர்களிற்கும் எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலிற்கமைய 

மாவட்டச் செயலாளர்களை பௌத்த அலுவல்கள் மேலதிக ஆணையாளர் நாயகம் எனவும் பிரதேச செயலாளர்கள் பௌத்த அலுவல்கள் ஆணையாளர் எனவும் பதவிப் பெயர்கள் குறிப்பிட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுப்பிய கடிதத்துடன் அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரதியும் இணைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு