கடற்படையினர் அடாவடி..! ஒரு கிராமமே கடலில் இறக்க முடியாமல் பட்டினியால் சாகும் நிலை..

ஆசிரியர் - Editor I
கடற்படையினர் அடாவடி..! ஒரு கிராமமே கடலில் இறக்க முடியாமல் பட்டினியால் சாகும் நிலை..

கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல கடற்படையினர் தடை விதிப்பதாகவும், புதிதாக தமது பகுதிக்கு நியமிக்கப்பட்ட கடற்படை தளபதியே தமக்கு தடை விதிப்பதாகவும் பிரதேச கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 

தமது வாழ்வாதாரமாக கடல் தொழிலையே நம்பி வாழ்கின்ற நிலையில் கடந்த சில நாட்களாக தம்மை மீன் பிடி தொழிலுக்கு செல்வதை தடுத்துள்ளனர். குறித்த கடற்படை அதிகாரியினால் சில வருடங்களுக்கு முன் நாம் தாக்கப்பட்டிருந்தமையும் 

அதனால் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரை மாற்றம் செய்து பொது மன்னிப்பும் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின் தாம் இதுவரை காலமும் நிம்மதியாக தொழில் செய்துவந்தோம். இந்நிலையில் தற்போது மீண்டும் அவரை 

தமது கிராஞ்சி கடற்பரப்புக்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக நியமித்தமையால் மீண்டும் தமக்கு பிரச்சனை வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். கடல் தொழில் செய்வதற்கு தம்மிடம் முழுமையான ஆதாரம் இருந்த போதிலும் கூட சிறுபிள்ளைத்தனமான காரணங்களை காட்டி 

நம்மை தொழிலில் ஈடுபடாமல் தொடுத்துள்ளார் வரும் தெரிவிக்கின்றனர்.மேலும் தம்மை அடிமைகள் போல் நடத்துவதாகவும் தகாத வார்த்தை பிரயோகங்கள் பேசுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து 

தம்மை தொழிலுக்கு செல்ல அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு