யாழ்.மாவட்டத்தில் 7 பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய 8 திட்டமிடல் அதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றம்..! வீட்டுத்திட்டம் குறித்த அளவுக்கதிகமான முறைப்பாடுகள் காரணமா?

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 7 பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய 8 திட்டமிடல் அதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றம்..! வீட்டுத்திட்டம் குறித்த அளவுக்கதிகமான முறைப்பாடுகள் காரணமா?

யாழ்.மாவட்டத்தில் 8 பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய 7 திட்டமிடல் அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

யாழ்ப்பாணம், மருதங்கேணி, காரைநகர், சண்டிலிப்பாய், சங்கானை, பருத்தித்துறை, சாவகச்சோி, கோப்பாய் பிரதேச செயலகங்களில் பணியாற்றிய 7 திட்டமிடல் அதிகாரிகளுக்கே

மாவட்ட செயலரினால் இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது. குறித்த திடீர் பணி இடமாற்றத்திற்கு வீட்டுத்திட்டம் தொடர்பான அதிக முறைப்பாடுகள் காரமாக இருக்கலாம். என கூறப்படுகிறது. 

குறிப்பாக யாழ்.மாவட்ட செயலருக்கு மட்டும் சுமார் 350ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக கூறியிருக்கும் நிலையில் திடீர் இடமாற்றத்திற்கு இதுவும் காரணமா? என கேள்வி எழுந்துள்ளது. 

இதன்படி கோப்பாய் பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி இ. திலீபன் காரைநகர் பிரதேச செயலகத்திற்கும், காரைநகர் பிரதேசத்தில் கடமையாற்றும் பா. ரேவதி மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கும்,

மருதங்கேணி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிருஷ்ணாளினி கோப்பாய் பிரதேச செயலகத்திற்கும், சங்கானை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வை.தர்ஷினி 

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு பதில் கடமையாகவும், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் இ.சர்வேந்திரன் யாழ்.பிரதேச செயலகத்திற்கும் 

யாழ்.பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் செ. சுபச்செல்வன் பருத்தித்துறை பிரதேச செயலகம் பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு