யாழ்.கரவெட்டி பிரதேசசபை முன்பாக குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்..! பிரதேசசபையின் நடவடிக்கைக்கு நியாயம் கேட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கரவெட்டி பிரதேசசபை முன்பாக குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்..! பிரதேசசபையின் நடவடிக்கைக்கு நியாயம் கேட்டு..

பழக்கடையிலிருந்து பழங்களை பிரதேசசபையினர் பறித்து சென்றிருந்த நிலையில் தமக்கு நீதி வழங்ககோரி பழக்கடை நடத்திவந்த பெண் தனது குடும்பத்தினருடன் பிரதேசசபை முன் தீக்குளிக்க முயன்றுள்ளார். 

குறித்த சம்பவம் கரவெட்டி பிரதேசசபை முன்பாக இடம்பெற்றிருக்கின்றது. நெல்லியடி சந்தைக்கு அண்மையில் பழக்கடை நடத்திவந்துள்ளார். 

இந்நிலையில் குறித்த பழக்கடையினால் சந்தை வியாபாரத்திற்கு இடையூறாக இருந்ததாக கூறி பிரதேசசபை ஊழியர்கள் பழங்களை பறித்தக் சென்றிருக்கின்றனர். 

இதனால் அவர்கள் அள்ளிச் சென்ற பழங்களுக்கான நட்ட ஈட்டை தமக்கு வழங்குமாறும் கோரியே எரிபொருள் போத்தல் ஒன்றுடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு