யாழ்.கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடந்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிக்கு கொரோனா தொற்று..! பிரதேச செயலர் உட்பட 91 பேர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடந்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிக்கு கொரோனா தொற்று..! பிரதேச செயலர் உட்பட 91 பேர் தனிமைப்படுத்தலில்..

யாழ்.பருத்தித்துறை - கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த சுமார் 91 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் கரவெட்டி பிரதேச செயலகத்தில் பரிசளிப்பு நிகழ்வொன்று இடம் பெற்று இதில் பிரதேச செயலர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் சான்றிதழ் வழங்கப்பட்ட மாணவி ஒருவருக்கு கொரொனா தொற்று  உறுதி செய்யப்பட்டதை  அடுத்து அந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலர் உட்பட 

91 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சில தினங்களில் இவர்களிற்கு பி.சீ.ஆர்.பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு