திடீரென கேட்ட பாரிய இடி சத்தத்தினால் அதிர்ச்சியடைந்த வயோதிப பெண் மரணம்..! யாழ்.கொக்குவிலில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
திடீரென கேட்ட பாரிய இடி சத்தத்தினால் அதிர்ச்சியடைந்த வயோதிப பெண் மரணம்..! யாழ்.கொக்குவிலில் சம்பவம்..

இடி சத்தத்தினால் அதிர்ச்சியடைந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கொக்குவில மேற்கு பகுதியில் நேற்று 27/04/2021 காலை இடம்பெற்றுள்ளது.

மழை பெய்து ஓய்ந்திருந்த நிலையில் குறித்த பெண் வீட்டு முற்றத்தில் இருந்துள்ளார். அப்போது தீடிரென பாரிய சத்தத்துடன் இடி இடித்த நிலையில் அதிர்ச்சியடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் நல்லம்மா என்ற 80 வயதான பெண்மணியே உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு