யாழ்.மாநகரம் மற்றும், நகரை சூழவுள்ள புறநகர் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவம்..! சுகாதார நடைமுறைகளை பேணாதோர் மீது உடன் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரம் மற்றும், நகரை சூழவுள்ள புறநகர் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவம்..! சுகாதார நடைமுறைகளை பேணாதோர் மீது உடன் நடவடிக்கை..

யாழ்.மாநகரம் மற்றும் நகரை சூழவுள்ள புறநகரங்களில் இன்று காலை தொடக்கம் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. 

பிரதான வீதிகள், மக்கள் கூடும் இடங்கள், சந்திகளில் இராணுவத்தினர் முக கவசங்கங்களை உரிய முறையில் அணியாதவர்களை எச்சரித்து அவற்றை உரிய முறையில் அணிந்து செல்ல பணித்து வருகின்றனர். 

பொதுமக்கள் ஒன்று கூடுவதையும் தடுப்பதோடு யாழ்.நகரப் பகுதிகளில் சன நெரிசலை தடுக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்து வரும் வருகின்றார்கள்.

பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதனை உறுதிப்படுத்தும் முகமாகவும் மக்களின் பாதுகாப்புக்காக 

இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு