யாழ்.கொக்குவில் பகுதியில் மீண்டும் இராணுவ சோதனை சாவடி..! இரவோடு இரவாக நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் பகுதியில் மீண்டும் இராணுவ சோதனை சாவடி..! இரவோடு இரவாக நடவடிக்கை..

யாழ்.காங்கேசன்துறை வீதி கொக்குவில் சந்திப் பகுதியில் தனியார் காணி ஒன்றில் மீண்டும் தற்காலிக இராணுவ காவலரண் ஒன்றை அமைக்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 

நேற்று இரவு இந்தப் பகுதியில் இராணுவ வாகனங்களில் தற்காலிக காவலரண் அமைக்கத் தேவையான தகரங்கள் உள்ளிட்ட பொருட்கள் இராணுவ வாகனங்களில் கொண்டுவந்து இறக்கப்பட்டன. 

அத்துடன், இராணுவத்தினரும் இந்தப் பகுதியில் நேற்றிரவு வரை நிலைகொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு