யாழ்.கோப்பாய் செல்வபுரம் கிராம மக்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கிய இராணுவம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் செல்வபுரம் கிராம மக்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கிய இராணுவம்..!

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியன் வழிகாட்டலில் 51வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ஊடாக கோப்பாய் - செல்வபுரம் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளது. 

போயா பௌரணமி தினத்தை முன்னிட்டு ராணுவத்தினரால் உலர் உணவு பொதி மற்றும் சமைத்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ராணுவத்தின் 51வது படைப் பிரிவு அமைந்துள்ள 

செல்வபுரம் கிராமத்தில் 300 பேருக்கு உலர் உணவு பொதிகளும் 300 பேருக்கு சமைத்த உணவுப் பொதிகளும் ராணுவத்தினரால் இன்றைய போயா பௌர்ணமி தினத்தில் வழங்கி வைக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வில் ராணுவத்தின் 51-ம் படைப் பிரிவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு