யாழ்.மாவட்டத்தில் ப.நோ.கூட்டுறவு சங்கங்களை விடவும் தனியார் கடைகளில் பொருட்கள் விலை குறைவு..! அதிகாரிகள் கண்டுகொள்வார்களா..?

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் ப.நோ.கூட்டுறவு சங்கங்களை விடவும் தனியார் கடைகளில் பொருட்கள் விலை குறைவு..! அதிகாரிகள் கண்டுகொள்வார்களா..?

யாழ்.நீர்வேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைகளில் மஞ்சள் பருப்பின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஒரு கிலோ மஞ்சள் மைசூர் பருப்பு ஒரு கிலோ 200 ரூபாவுக்குவிற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை தீடீரென 

20 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ மஞ்சள் மைசூர் பருப்பின் புதிய விலையாக 220 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஏனைய தனியார் வர்த்தக நிலையங்களில் மஞ்சள் மைசூர் பருப்பு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 

இவ்வாறு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் விலை அதிகரிக்கபடுவது நுகர்வோர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருட்களின் விலை திடீரென அதிகரிப்பது தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் விலை அதிகரிப்பு தொடர்பில் உரியவர்கள் தலையீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு