வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..! சம்பவ இடத்தில் நிபுணர் குழு ஆய்வு..

ஆசிரியர் - Editor I
வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..! சம்பவ இடத்தில் நிபுணர் குழு ஆய்வு..

முல்லைத்தீவு - வட்டுவாகல் விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றயவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் சர்பத் வியாபாரம் செய்பவரின் மகனும் மற்றொரு இளைஞனும் இணைந்து சர்பத் கடைக்கு சென்றுள்ளதுடன் கடைக்கு பின்னால் சென்றுள்ளனர். 

இதன்போது வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து சர்பத் கடை நடத்திவரும் தாயார் உடனடியாக அருகில் உள்ள கடற்படை முகாமில் உதவி கோரியபோதும் 

உதவி கிடைக்காத நிலையில் வீதியால் சென்றவர்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும் சிகிச்சை பலனின்றி 19 வயதான சந்திரகுமார் டிசாந் என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், 20 வயதான செல்வக்குமார் சயந்தறூபன் என்ற இளைஞன் 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் என்ன வெடிபொருள் வெடித்தது என்பது அறியப்படாத நிலையில் 

நிபுணர்குழு சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு