யாழ்.பல்கலைகழக சட்டபீட மாணவர்கள் இருவர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக சட்டபீட மாணவர்கள் இருவர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி யாழ்.மாவட்டத்தல் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைகழக சட்டபீட மாணவர்கள் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கேகாலை மற்றும் குருநாகல் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். 

மேலும் கோப்பாய் பகுதியில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாவர். மேலும் பருத்துறையில் ஒருவருக்கும், யாழ்.சிறைச்சாலையில் ஒருவர், 

தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒருவருக்கும், கிளிநொச்சி வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கும், முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு