யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..! யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸார் அதிரடி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..! யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸார் அதிரடி..

யாழ்.கோப்பாய் பகுதியில் நீண்டகாலமாக ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பிரதான சூத்திரதாரி உட்பட 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த கடத்தல் கும்பல் நுட்பமான முறையில் கடல்வழியாக இலங்கைக்கு கடத்திவருவதுடன் விற்பனையிலும் ஈடுபட்டுவந்ததாகவும் இந்த கும்பலின் தலைவர் உட்பட 3 பேர இன்று கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த கடத்தல் காரர்கள் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 கோடி ரூபா பெறுமதியான ஐஸ், ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பன்னிரெண்டு தடவைக்கு மேல் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்களை கடத்திவந்து 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஏனைய இடங்களுக்கு தரை மார்க்கமாக கடத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த குழுவினர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் மேனன் அணியினரால் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் உட்படுத்தப்படவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு