யாழ்.ஸ்ரான்லி கல்லுாரி தனிமைப்படுத்தப்பட்டது..! சுகாதார பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக சுகாதார பிரிவு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஸ்ரான்லி கல்லுாரி தனிமைப்படுத்தப்பட்டது..! சுகாதார பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக சுகாதார பிரிவு நடவடிக்கை..

யாழ்.ஸ்ரான்லி கல்லுாரி (கனகரத்தினம் மகா வித்தியாலயம்) இன்று சுகாதார பிரிவினால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பாடசாலை நிர்வாகமானது சனசமூக நிலையம் ஒன்றுக்கு விளையாட்டு நிகழ்வு நடாத்துவதற்கு 

விளையாட்டு மைதானத்தினை வழங்கியதன் காரணமாக இன்றைய தினம் குறித்த பாடசாலை தனிமைப் படுத்தப் பட்டுள்ளது நேற்றைய தினம் சனசமுக நிலையத்தின் விளையாட்டு போட்டி 

விமரிசையாக இடம்பெற்றதோடு பல நூற்றுக் கணக்கான மக்களும் அந்த விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த பாடசாலை, 

பாடசாலை விளையாட்டு மைதானம் என்பனதனிமைப் படுத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு