யாழ்.மாவட்ட கொவிட் -19 தடுப்பு செயலணி அவசரமாக கூடியது..! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட கொவிட் -19 தடுப்பு செயலணி அவசரமாக கூடியது..! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம்...

யாழ்.மாவட்ட கொவிட் -19 தடுப்பு செயலணி இன்று காலை அவசரமாக கூடி மாவட்டத்தின் பாதுகாப்பு, மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளது.

யாழ்.மாவட்ட செயலர் அலுவலகத்தில் இடம்பெறும் குறித்த விசேடகூட்டத்தில் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ,

மாகாண சுகாதார பணிப்பாளர் ,யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், 

முப்படையினர் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் ,சுகாதார பிரிவினருடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட உள்ளதோடு

தற்போது உள்ள கொரோனா தீவிர நிலையில் யாழ் மாவட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள்,

நடைமுறைகள், தொடர்பில் ஆராய்வதற்காக தற்பொழுது தடுப்பு செயலணியின் கூட்டம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு