மாவீரர்களின் பெயர்களில் அடையாள அட்டை, கடவுச்சீட்டு தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பிவந்த 42 வயதான நபர் கைது..!

ஆசிரியர் - Editor I
மாவீரர்களின் பெயர்களில் அடையாள அட்டை, கடவுச்சீட்டு தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பிவந்த 42 வயதான நபர் கைது..!

விடுதலை புலிகள் இயக்கத்தின் மாவீரர்கள் பெயர்களில் போலி அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுக்களை தயாரித்த 42 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த விடுதலை புலி அமைப்பின் உறுப்பினர்களின் பெயரில் அடையாள அட்டை மற்றும் போலியான கடவுச்சீட்டுக்களை தயாரித்து நபர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சந்தேகநபர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு