யாழ்.கல்விவலய கணக்குப் பகுதி ஊழியருக்கு கொரோனா..! கணக்குப் பகுதி முடக்கம், 17 ஊழியர்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்விவலய கணக்குப் பகுதி ஊழியருக்கு கொரோனா..! கணக்குப் பகுதி முடக்கம், 17 ஊழியர்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தலில்..

யாழ்.கல்வி வலயத்தின் கணக்கு கிளையில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கணக்கு கிளை 10 நாட்களிற்கு முடக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் குறித்த ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வலயக் கல்வித் திணைக்களத்தின் நிதிப்பிரிவு முழுமையாக முடக்கப்பட்டது.

நிதிப் பிரிவில் பணியாற்றும் 17  உத்தியோகத்தர்களும் சுய  தனிமைப்படுத்தளிற்கு உட்படுத்தப்பட்டனர். திருநெல்வேலியைச் சேர்ந்த்உத்தியோகத்தரது மாமனாரிற்கு 

கடந்த வெள்ளிக் கிழமை பெற்ற மாதிரியில் கொரோனா உறுதி செய்யப்பட்டதனையடுத்து உத்தியோகத்தர் கடந்த சனிக் கிழமை முதல் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டு 

புதன் கிழமை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது உத்தியோகத்தருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து நேற்றைய தினம் யாழ்.சுகாதார வைத்திய அதிகாரியின் உத்தரவில் 17 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 

இவர்களிற்கான பி.சி.ஆர் பரிசோதனை எதிர் வரும் 2ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு