அதிகாலை 1 மணிவரையும் மதுபானசலைகளை திறக்க அனுமதியுங்கள்..! பொருளாதாரத்தை மீட்க வழிசொன்ன நாடாளுமன்ற உறுப்பினர்..

ஆசிரியர் - Editor I
அதிகாலை 1 மணிவரையும் மதுபானசலைகளை திறக்க அனுமதியுங்கள்..! பொருளாதாரத்தை மீட்க வழிசொன்ன நாடாளுமன்ற உறுப்பினர்..

இலங்கையின் பொருளாதரத்தை உயர்த்த அதிகாலை 1 மணிவரை மதுபானசாலைகளை திறக்க அனுமதியுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கூறியுள்ளார். 

இலங்கையில் சுற்றுலா துறையையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக 'இரவு நேர பொருளாதார முறையை அறிமுகப்படுத்த வேண்டும். 

இதற்கு ஹொட்டல் மதுகடை மற்றும் மதுபான கடைகளை திறக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று நாடாளுமன்றில் நேற்று டயானா கமகே முன்மொழிந்தார்.

மதுபான உரிமம் கொண்ட ஹொட்டல்களில் உள்ள மதுகடை வழக்கமாக இரவு 11 மணிக்கு மூடப்படும் இந்த பார்களை அதிகாலை 1 மணி வரை திறந்த நிலையில் இருக்கவும், 

மது பரிமாறவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் நேற்று பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.அதே நேரத்தில் இரவு 9 மணிக்கு மூடப்படும் மதுபான கடைகள். 

ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி வரை திறந்த நிலையில் இருக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரினார்.இது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 

மற்றும் உள்ளூர்வாசிகள் பணத்தை செலவழிக்க உதவும், இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் இலங்கைக்கு ஒரு இரவு பொருளாதாரத்தை ஏற்றுக்கொள்ள உதவும் என்று 

எம்.பி. டயனா கமகே மேலும் கூறினார்சொர்க்க தீவாக இருக்கும் இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு இரவு பொருளாதாரம் அவசியம். 

பல வளர்ந்த நாடுகள் ஒரு இரவு பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இன்று அவை மாறிவிட்டன. ஒரு இரவு பொருளாதாரம் ஒரு நாட்டுக்கு அதிக வெளிநாட்டு நாணயத்தை சம்பாதிக்க உதவுகிறது, 

என்று அவர் மேலும் கூறினார். ஒரு மருத்துவ தாவரமாக கஞ்சாவை வளர்ப்பது மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் 19 ஆம் நூற்றாண்டில் கஞ்சா வளர்ப்பதை தடை செய்தது பிரிட்டிஷ் அரசாங்கம்தான். 

சில ஆண்டுகளில் சுமார் 70 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருவாயைப் பெற முடியும், என்று அவர் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு