வேட்டையாடி பிடிக்கப்பட்ட 5 உடும்புகளுடன் ஒருவர் கைது..! வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
வேட்டையாடி பிடிக்கப்பட்ட 5 உடும்புகளுடன் ஒருவர் கைது..! வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டது..

கிளிநொச்சி - வட்டக்கச்சி புதுக்காடு பகுதியில் 5 உடும்புகளுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சியாக்குவதற்கு தயாராக வைத்திருந்திருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்டு 5 உடும்புகளை மீட்டு சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கிளிநொச்சி நீதவானின் உத்தரவிற்கமைய, உடும்புகள் சுண்டிக்குளம் சரணாலயத்தில் இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு