கட்டுப்பாடற்ற வேகம்..! பாலம் கட்டுமான பணி நடைபெற்றுவரும் பள்ளத்திற்குள் புகுந்த மோட்டார் சைக்கிள், ஒருவர் பலி, மற்றொருவர் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம்..! பாலம் கட்டுமான பணி நடைபெற்றுவரும் பள்ளத்திற்குள் புகுந்த மோட்டார் சைக்கிள், ஒருவர் பலி, மற்றொருவர் ஆபத்தான நிலையில்..

முல்லைத்தீவு - வள்ளிபுனம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, வள்ளிபுனம் பகுதியில் பாலம் புனரமைப்பு செய்யப்பட்டுவரும் நிலையில் அந்த இடத்திற்கு அருகில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் மிகை வேகத்தால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல்போன நிலையில் கட்டுமான பணிகள் இடம்பெற்றுவரும் பள்ளத்திற்குள் விழுந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 

மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு