யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் இயக்கச்சி காட்டுப்பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார்..! அதிரடிப்படை, இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் இயக்கச்சி காட்டுப்பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார்..! அதிரடிப்படை, இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு விசாரணை..

கிளிநொச்சி பளை - இயக்கச்சி பகுதியில் பற்றைக்காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த கார் விசேட அதிரடிப்படையினரால் சோதனையிடப்பட்டு பளை பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் 13.04.2021 நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு கார் ஆள் இல்லாமல் நிற்பதை அவதானித்த சிலர் பளை பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த பளை பொலிசாரும் 

இராணுவத்தினரும் காரை சோதனையிட்டபோது காரின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததை அவதானித்ததையடுத்து பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதையடுத்து இன்று 14.04.2021 காலை விசேட அதிரடிப்படையின் 

உதவியுடன் காரின் கதவுகள் திறக்கப்பட்டு பரிசோதனையிடப்பட்டது. காரின் பல பாகங்கள் திருட்டு போயுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.மேலும் குறித்த காரானது தென்னிலங்கையில் திருட்டு போன காராக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இது வரையில் எவரும் இது தொடர்பாக கைது செய்யப்படவும் இல்லை மேலதிக விசாரனைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு