யாழ்.வடமராட்சி கிழக்கில் கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த மர்ம பொருளை மதுபானம் என நினைத்து குடித்த குடும்பஸ்த்தர் பலி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த மர்ம பொருளை மதுபானம் என நினைத்து குடித்த குடும்பஸ்த்தர் பலி..!

யாழ்.வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்துவந்த மர்ம பொருளை குடித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த பொருளை மதுபானம் என நினைத்து சுமார் 20 பேர்வரை பருகியுள்ளனர். 

இந்நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நாகர்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஸ்ரீகுமார் (வயது46) என்பவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த நபரின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து மர்ம பொருளை அருந்திய மேலும் சிலர் வைத்தியசாலைக்கு சென்று தங்களை பரிசோதிக்குமாறு கேட்டுள்ளதுடன், கடலில் மிதந்துவந்த போத்தலையும் வைத்தியசாலையில்

ஒப்படைத்துள்ளதாக தொியவருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு