யாழ்.திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களுடன் தொடர்புடைய 22 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களுடன் தொடர்புடைய 22 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் இன்று 24 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் குறித்த விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி யாழ்.திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களை சேர்ந்த 22 பேருக்கு 2ம் பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதுிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் யாழ்.சிறைச்சாலையில் ஒருவருக்கும், பருத்துறை வைத்தியசாலையில் ஒருவருக்கும், 

கிளிநொச்சி கண்டாவளையில் ஒருவருக்கும், முல்லைத்தீவில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு