கேவலமான நடவடிக்கையை அரசு உடன் நிறுத்தவேண்டும்..! யாழ்.மாநகர முதல்வர் உடன் விடுவிக்கப்படவேண்டும், தமிழ்தேசிய கூட்டமைப்பு காட்டம்..

ஆசிரியர் - Editor I
கேவலமான நடவடிக்கையை அரசு உடன் நிறுத்தவேண்டும்..! யாழ்.மாநகர முதல்வர் உடன் விடுவிக்கப்படவேண்டும், தமிழ்தேசிய கூட்டமைப்பு காட்டம்..

தமிழ் மக்களை பய பீதியில் வைத்திருப்பதற்கே அரசாங்கம் விரும்புகிறது. இதன் வெளிப்பாடே யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம், என தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாநகர முதல்வர் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு அதிகாலை நேரத்தில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

மேற்படி திட்டமிட்ட நடவடிக்கையினை தமிழ்தேசிய கூட்டமைப்பு மிக வன்மையாக கண்டிக்கிறது. யாழ்.மாநகரசபையும் ஏனைய மாநகரசபைகளை ஒத்ததாக மாநகரசபைகளுக்கான அதிகாரங்களை பூரணமாக பயன்படுத்த முயற்சிக்கின்றது. 

அதனை முடக்குவதற்கே இவ்வாறான தடைகள் உண்டாக்கப்படுகின்றன. இந்நிலையில் அரசு இந்த கேவலமான நடவடிக்கைகளை உடன் நிறுத்தவேண்டும். கைது செய்யப்பட்ட மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் விடுவிக்கப்படவேண்டும் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு