யாழ்.மாநகர முதல்வர் கைது தொடர்பாக ராஜபக்ஸக்களை விமர்சிக்க முன் தமிழ் மகாஜனம் தமது முகத்தை நிலைக்கண்காடியில் பார்க்கவேண்டும்..! மனோ காட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர முதல்வர் கைது தொடர்பாக ராஜபக்ஸக்களை விமர்சிக்க முன் தமிழ் மகாஜனம் தமது முகத்தை நிலைக்கண்காடியில் பார்க்கவேண்டும்..! மனோ காட்டம்..

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்ட விடயத்தில் ராஜபக்ஸக்களை விமர்சிப்பதற்கு முன்னர் தமிழ் மகாஜனம் தமது முகத்தை நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கூறியுள்ளார். 

யாழ்.மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், மணிவண்ணன் கைது செய்யப்பட்டதை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம். 

மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு பதிலாக அவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து விளக்கம்கோரும் சட்டபூர்வ நடவடிக்கையினை வடமாகாண ஆளுநர் எடுத்து நிதானமான நடந்து கொண்டிருக்கவேண்டும். 

இந்நிலையில் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்காக ராஜபக்ஸக்களை விமர்சிக்க முன்னர் தமிழ் மகாஜனம் தமது முகத்தை நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். இந்த கைது அரவை மட்டுமல்ல 

எம்மவர்களையும் திருப்தியடைய செய்துள்ளது என நான் அறிகறேன். கோபத்துடனும், மனவருத்தத்துடனும் ஒருசேர இதை இப்போது ஒரு தமிழ் இலங்கையனாகக் கூறுகின்றேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு