SuperTopAds

தமிழீழ விடுதலை புலிகளையும், அவர்களது கொள்கைகளையும் ஊக்குவித்த குற்றச்சாட்டிலேயே மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டார்..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளையும், அவர்களது கொள்கைகளையும் ஊக்குவித்த குற்றச்சாட்டிலேயே மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டார்..!

தமிழீழ விடுதலை புலிகளையும் அவர்களது கொள்கைகளையும் ஊக்குவித்த குற்றச்சாட்டில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 2011 ஆகஸ்ட் 11 ம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களிற்காகவே யாழ்மாநகர முதல்வர் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

யாழ்மாநகரசபையை சேர்ந்த ஐந்து பணியாளர்கள் பொலிஸாரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து பொலிஸாரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது அந்த ஐவரும் அணிந்திருந்த சீருடைகள் யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளின் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடைகள் போன்றவை என்பது உறுதியாகியது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.