கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 20 பேர் கைது..! யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்..

ஆசிரியர் - Editor I
கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 20 பேர் கைது..! யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்..

கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் சிலாபம் - கோண்டாச்சிகுடா பகுதியில் 20 பேர் கடற்படையின் சிறப்பு நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நான்கு முச்சக்கர வண்டிகளை இடைநிறுத்திய கடற்படையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றமை தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட நபர்களில் 16 வயது சிறுவன் உட்பட 15 ஆண்களும், 13 வயது சிறுமி உட்பட ஐந்து பெண்களும் அடங்குவர். 

அத்துடன் அவர்கள் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், வத்தளை, புத்தளம் மற்றும் வாளைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த சட்டவிரோத வெளியேற்ற முயற்சியை உருவாக்கிய ஒருவரும் கைது செய்யப்பட்ட குழுவில் அடங்குவார். 

கைதான நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட முச்சக்கர வண்டி என்பன சிலாம் பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு