விகாரைக்கு சென்ற சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம்..! பௌத்த பிக்குவுக்கு 9ம் திகதிவரை விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I
விகாரைக்கு சென்ற சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம்..! பௌத்த பிக்குவுக்கு 9ம் திகதிவரை விளக்கமறியல்..

விகாரைக்கு சென்ற சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குவை எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் மேனக்கா தமயந்தி உத்தரவிட்டுள்ளார். 

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்குச் சென்ற 12 மற்றும் 14 வயதான இரு சிறுவர்களை பௌத்த பிக்கு தங்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தமது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய விஹாராதிபதியை இன்று புதன்கிழமை (07) பொலிசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குவை இன்று கந்தளாய் நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே அவரை எதிர்வரும் 9 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு