யாழ்.மாநகரில் முடக்கப்பட்ட பகுதியில் உள்ள அரைவாசிக்கும் அதிகமான கடைகள் நாளை திறக்கப்படும்..! கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் முடக்கப்பட்ட பகுதியில் உள்ள அரைவாசிக்கும் அதிகமான கடைகள் நாளை திறக்கப்படும்..! கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்..

யாழ்.மாநகரில் முடக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள 75 வரையான வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த மிகுதி வர்த்தக நிலையங்கள் நாளை திறக்கப்படும். என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியிருக்கின்றார். 

சமகால நிலமைகள் குறித்து யாழ்.மாநகர முதல்வர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த 26 ஆம் திகதியிலிருந்து யாழ்.நகர வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களில் 75 ற்கும் மேற்பட்ட கடைகளை தவிர ஏனைய கடைகள் நாளைய தினம் மீள திறக்கப்படுவதாக மாநகர முதல்வர் தெரிவித்தார். 

இன்று காலை யாழ்.மாநகர சபை பொது வைத்திய அதிகாரி தலைமையில் நடந்த கூட்டத்தின் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஏற்கனவே பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களை தவிர்ந்த அரைவாசிக்கு மேற்பட்ட கடைகள் 

நாளை திறக்க அனுமதிக்கப் பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்போக்குவரத்து சேவைகளை தற்போது உள்ளதைபோன்று பண்ணை பகுதியிலே பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் 

எனினும் அது தொடர்பான முடிவை எதிர்வரும் நாட்களில் கூடிய ஆராய உள்ளதாகவும் தெரிவித்தார்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு