யாழ்ப்பாணத்திலிருந்து இரு வெள்ளை வாகனங்களில் சென்ற வன்முறை கும்பல் வீடு புகுந்து தாக்குதல்..! காதல் விவகாரம் காரணமாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து இரு வெள்ளை வாகனங்களில் சென்ற வன்முறை கும்பல் வீடு புகுந்து தாக்குதல்..! காதல் விவகாரம் காரணமாம்..

யாழ்.மாவட்டத்திலிருந்து இரு வாகனங்களில் வாள்களுடன் சென்ற குழு வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, மூன்று முறிப்பு பகுதி இளைஞன் யாழ்.ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளதுடன், பெண் வீட்டார் சம்மதமின்றி பெண்ணை அழைத்து சென்று பதிவு திருமணமும் செய்துள்ளார்.

இதனையடுத்து யாழில் இருந்து இரு வான்களில்   வாள்கள் சகிதம் 10 மேற்பட்ட இளைஞர் குழுவுடன் வவுனியாவுக்கு சென்ற தந்தை குறித்த இளைஞன் வாடகைக்கு குடியிருந்த வீட்டு உரிமையாளரின் வீடு,  

இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீடு என்பவற்றுக்குள் புகுந்து  அச்சுறுத்தியதுடன் வீட்டு உடமைகளையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்திய இளைஞர் குழு கறுப்பு துணிகளால் முகத்தை மறைத்து கட்டியிருந்ததாகவும், இரு வெள்ளை நிற வான்களில் வந்ததாகவும் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டோர் பொலிஸாரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு