யாழ்.மாநகரில் தொற்று உறுதி செய்யபடாத வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கலாம்..! மாவட்ட கொவிட் செயலணி தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் தொற்று உறுதி செய்யபடாத வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கலாம்..! மாவட்ட கொவிட் செயலணி தீர்மானம்..

யாழ்.மாநகரில் தொற்று உறுதி செய்யப்படாத வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறக்க நாளை தொடக்கம் அனுமதிக்கப்படும் என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி முதல் யாழ்.நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் 

கடந்த 14 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று  இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை 

நாளை காலை முதல் திறப்பதற்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகமாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்

நேற்று அவசரமாக கூடிய யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 

தொற்று உறுதி செய்யப்பட்டோர் தவிர்ந்த ஏனையோரின் கடைகளை நாளை முதல் திறப்பதற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்
 மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால் 

மக்கள் வழமை போன்று ஒன்று கூடல்  செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும் பொதுமக்கள்  அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். 

அத்தோடு நகரப் பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்களை ஒன்று கூடாத வண்ணம் செயற்படவும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அத்தோடு தற்போது அபாய நிலை இன்னும் நீங்கவில்லை எனவே தற்போதைய நிலையில் பொது மக்களை ஒன்று கூடலை தடுப்பதற்கு ரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு