யாழ்.மாநாகர முடக்கம் நீடிக்குமா? நீக்கப்படுமா? இன்று இரவு முக்கிய தீர்மானம். 2வது தொகுதி PCR முடிவுகள் இன்று மாலை வெளியாகும்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநாகர முடக்கம் நீடிக்குமா? நீக்கப்படுமா? இன்று இரவு முக்கிய தீர்மானம். 2வது தொகுதி PCR முடிவுகள் இன்று மாலை வெளியாகும்..

யாழ்.மாநகரில் முடக்கப்பட்டுள்ள பகுதியை விடுவிப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று இரவு முக்கிய தீர்மானம் எடுக்கப்படும். என மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.மாநகரில்  முடக்கப்பட்டுள்ள பகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் பெறப்பட்ட PCR மாதிரிகள் 2 தொகுதிகளாக முல்லேரியா ஆய்வுகூடத்திற்கு அனுப்பபட்டிருந்தது.

அதில் ஒரு தொகுதி திங்கள் கிழமை அனுப்பபட்ட மாதிரிகளின் முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் 2வது தொகுதியாக மாதிரிகளின் முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாகும். அதனடிப்படையில் யாழ்.மாநகரை தொடர்ந்தும் முடக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று இரவு

முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு