யாழ்.மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.மாநகரில் முடக்கப்பட்ட பகுதி PCR முடிவுகள் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.மாநகரில் முடக்கப்பட்ட பகுதி PCR முடிவுகள் வெளியானது..

யாழ்.நவீன சந்தையுடன் தொடர்புடைய மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

யாழ்.மாநகரில் முடக்கப்பட்ட பகுதியை சேர்ந்த 464 பேருடைய PCR மாதிரிகள் கடந்த திங்கள் கிழமை முல்லேரியா ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பபட்டிருந்தது.

அதன் பெறுபேறுகள் தொடர்பில் இன்று அதிகாலை கிடைத்துள்ளன. அதன்படி 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என பணிப்பாளர் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு