வீடு வீடாக சென்று குடும்ப விபரம் சேகரிக்கும் பொலிஸார்..! காரணம் கூறப்படாமையால் மீண்டும் அச்சத்தில் வடமாகாண மக்கள்..

ஆசிரியர் - Editor I
வீடு வீடாக சென்று குடும்ப விபரம் சேகரிக்கும் பொலிஸார்..! காரணம் கூறப்படாமையால் மீண்டும் அச்சத்தில் வடமாகாண மக்கள்..

வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் வீடுகளுக்கு சென்றுள்ள பொலிஸார் குடும்ப விபரங்களை திரட்டும் படிவம் ஒன்றினை வழங்கியுள்ளதுடன், அவற்றை பெறுவதற்காக 2 நாட்களின் பின் வருவதாக கூறி சென்றிருக்கின்றனர். 

எவ்விதமாக தெளிவுபடுத்தும் அறிவுறுத்தல்கள் மற்றும் காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல் இவ்வாறு குடும்ப விபரங்களை கோருவதால் பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று முதல் பூந்தோட்டம் பகுதியில் வீடு வீடாக சென்ற பொலிஸார் வீடுகளின் வசிப்பவர்களின் பெயர், முகவரி, தொழில், தேசிய அடையாள அட்டையின் இலக்கம், தொலைபேசி இலக்கம் போன்ற 

முக்கிய தகவல்களை கோரிய விண்ணப்பப்படிவம் ஒன்றினை வழங்கி வருவதுடன் அவ்விபரங்களை சேகரிப்பதற்கு மீண்டும் வருகை தரவுள்ளதாகவும் அப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை நிரப்பி கையளிக்குமாறு 

அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டு சென்றுள்ளனர். இவ்வாறு பொலிசாரினால் குடும்ப விபரங்கள் சேகரிப்பதற்கு காரணங்கள் தெரியாமல் மக்கள் மத்தியில் ஒரு அச்சநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர் .

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு