யாழ்.மிருசுவிலில் 40 ஏக்கர் காணியை சுவீகரிக்க முயற்சி..! பொதுமக்கள் தீவிர எதிர்ப்பு, அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டது..

ஆசிரியர் - Editor I

யாழ்.எழுதுமட்டுவாழ் பகுதியில் மக்களுக்கு சொந்தமான காணியை இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

இராணுவத்தின் 52ஆவது படையணியின் தலைமையகம் அமைப்பதற்காக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு அளவீடுசெய்ய முயற்சிக்கப்பட்டது.

இதன்போது, ஏ-9 பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அளவீட்டு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் மக்களுடன் இணைந்து அரசியல்வாதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு