பேருந்து நிலையத்தில் கிடந்த தகர பெட்டியினால் பரபரப்பு..! விசேட அதிரடிப்படையினர், வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் பிரிவு குவிப்பால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
பேருந்து நிலையத்தில் கிடந்த தகர பெட்டியினால் பரபரப்பு..! விசேட அதிரடிப்படையினர், வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் பிரிவு குவிப்பால் பதற்றம்..

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான இரும்பு பெட்டகத்தினால் இன்று காலை பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. 

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளுக்கான பேருந்துகள் தரித்து நிற்கும் இடத்திற்கு அருகாமையில் 

குறித்த பெட்டியானது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 

விசேட அதிரடிப்படையினரது குண்டு செயலிழக்கும் அணியினர் சம்பவ இடத்திற்குச் சென்று பலத்த பாதுகாப்புடன் குறித்த பெட்டியைத் திறந்து பார்த்தனர்.

இந்த நிலையில், குறித்த பெட்டியானது இராணுவ சிப்பாய் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு