யாழ்.வடமராட்சி - வல்லிபுர குறிச்சியில் பொலிஸாரை மோதி தள்ளிய மணல் கடத்தல்காரர்கள்..! பொலிஸ் பொறுப்பதிகாரி படுகாயம், தீவிர தேடுதலால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி - வல்லிபுர குறிச்சியில் பொலிஸாரை மோதி தள்ளிய மணல் கடத்தல்காரர்கள்..! பொலிஸ் பொறுப்பதிகாரி படுகாயம், தீவிர தேடுதலால் பதற்றம்..

யாழ்.வடமராட்சி கிழக்கிலிருந்து மணல் கடத்திவந்தவர்களை தடுக்க முயற்சித்த பொலிஸாரை வானத்தால் மோதி தள்ளிய மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் பருத்துறை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி படுகாயமடைந்துள்ளார். 

இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வடமராட்சி கிழக்கிலிருந்து வடமராட்சி வல்லிபுர குறிச்சி வழியாக மணல் கடத்தப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசி தகவல் கிடைத்திருக்கின்றது.

இதனையடுத்து பருத்துறை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி அஜித்குமார் தலமையில் பொலிஸ் பிரிவு வல்லிபுர குறிச்சி பகுதியில் வழிமறித்து சோதனை நடாத்த முயற்சித்திருக்கின்றது. 

இதன்போது மணல் கடத்தல்காரர்கள் கனரக வாகனத்தினால் பொலிஸாரை மோதி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இந்த மோதலில் பொலிஸ் பொறுப்பதிகாரி அஜித்குமார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடி தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு