யாழ்.பல்கலைகழக மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..! 400 மாணவர்களுடன் பெண்கள் விடுதி முடக்கம், பீ.சி.ஆர் பரிசோதனைக்கு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..! 400 மாணவர்களுடன் பெண்கள் விடுதி முடக்கம், பீ.சி.ஆர் பரிசோதனைக்கு நடவடிக்கை..

யாழ்.பல்கலைகழக வவுனியா வளாக மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. 

கண்டியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டிருந்தது. 

விடுமுறையில் சென்ற அவர் மீண்டும் பல்கலைகழகம் திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலிற்குள்ளாக்கப்பட்டிருந்தார். 

 அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் குறித்த மாணவி கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தின் பெண்கள் விடுதியின் ஒருபகுதி சுமார் 400 மாணவர்களுடன் 

இன்று சனிக்கிழமை முதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளிச்செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. 

அவர்களிற்கு கட்டம், கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு