யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! யாழ்.நகரை சேர்ந்த 84 வயது பெண்மணி, தொற்று விபரம் வெளியானது, மாகாண பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! யாழ்.நகரை சேர்ந்த 84 வயது பெண்மணி, தொற்று விபரம் வெளியானது, மாகாண பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா மரணம் ஒன்று பதிவாகியுள்ளதுடன், மாவட்டத்தில் தொற்றுக்குள்ளாவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். 

இதன்படி யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 6 பேருக்கும், யாழ்.காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மாவட்டத்தை சேர்ந்த 6 போில்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யாழ்.நகரத்தை சேர்ந்த 84 வயதான பெண்மணியாகும். 

மேலும் பருத்துறை வைத்தியசாலை மற்றும் சாவகச்சோ நாவற்குழி பகுதிகளை சேர்ந்த இருவர் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் கூறினார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு