பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை..! 12 மணி நேரத்தில் கள்ளர்களை பிடித்து, பொருட்களை மீட்ட இளைஞர்கள்..! யாழ்.நாவற்குழி இளைஞர்கள் துணிகரம்..

ஆசிரியர் - Editor I
பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை..! 12 மணி நேரத்தில் கள்ளர்களை பிடித்து, பொருட்களை மீட்ட இளைஞர்கள்..! யாழ்.நாவற்குழி இளைஞர்கள் துணிகரம்..

யாழ்.நாவற்குழி பகுதியில் வீட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை களவாடிய கள்ளர்களை பிரதேச இளைஞர்கள் 12 மணி நேரத்தில் மடக்கி பிடித்ததுடன் பொருட்களையும் மீட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

60 ஆயிரம் ரூபாய் பணம், மின்னியல் உபகரணங்கள், வீட்டின் ஜன்னல் மற்றும் கிறில்களையும் கழற்றி சென்றுள்ளனர். 

நாவற்குழியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை ஒன்றின் பின்பகுதியில் உள்ள வீட்டினை உடைத்து குறித்த கொள்ளை இடம்பெற்றுள்ளது. 

வீட்டின் உரிமையாளர்கள் இன்று காலை வேலைக்காக வெளியே சென்றிருந்த வேளையில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த பொள்ளையுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களும் நாவற்குழி புதியகுடியேற்றத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பல களவுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 8:30 மணிக்குப் பின் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று சுமார் 12 மணித்தியாளங்களுக்குள் கொள்ளையடிக்கப்பட்ட பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் பணம் என்பன நாவற்குழி இளைஞர்களால் மீட்கப்பட்டது.

மேலும் கொள்ளையர்களையும் மடக்கிப் பிடித்து சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு