யாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ள பகுதிகளை விடுவிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் திங்கள் கிழமைக்கு முன் எடுக்கப்படும்..! கட்டளை தளபதி விளக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ள பகுதிகளை விடுவிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் திங்கள் கிழமைக்கு முன் எடுக்கப்படும்..! கட்டளை தளபதி விளக்கம்..

யாழ்.மாநகர் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் முடக்கப்பட்டிருக்கும் வர்த்தக நிலையங்களை மீள திறப்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காக மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணி திங்கள் கிழமைக்கு முன் கூடி தீர்மானத்தை எடுக்கும். 

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியும், மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் இணை தலைவருமான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 

முடக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள், அங்காடிகளை மீள திறப்பது தொடர்பான கரிசனை எமக்குள்ளது. ஆனாலும் சுகாதார பாதுகாப்பு நிலமைகளை கருத்தில் கொள்ளவேண்டிய அவசியம் உள்ள நிலையில் அது குறித்து ஆராயவேண்டியுள்ளது. 

எனவே எதிர்வரும் திங்கள் கிழமைக்கு முன்பதாக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூடி இந்த விடயம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதுடன், இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்கும் என அவர் மேலும் கூறியிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு