யாழ்.மாநகரில் இன்று மட்டும் 21 பேருக்கு தொற்று உறுதி..! பூரண விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் இன்று மட்டும் 21 பேருக்கு தொற்று உறுதி..! பூரண விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பான விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி இன்று தொற்றுக்குள்ளான 25 பேரில் யாழ்.நவீன சந்தையுடன் தொடர்புடைய 8 பேரும், சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 6 பேரும்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 5 பேரும் அடங்குகின்றனர்.

உடுவிலில் தொற்றுக்குள்ளான 2 பேரில் ஒருவர் மருதனார்மடம் சந்தை வியாபாரி ஆவார். மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளான 5 பேரில் 2 பேர் தொற்று அறிகுறியுடன் அனிமதிக்கப்பட்டவர்களாவர்.

மேலும் 3 பேர் தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் என பணிப்பாளர் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு