யாழ்.மாநகரில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, முல்லேரியா ஆய்வுகூடத்தில் 551 பேரின் PCR மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனுடன் சேர்த்து 117 பேருக்கு யாழ்.மாநகரில் இதுவரையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் சுமார் 1400 பேரிடம் PCR மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு