தறிகெட்டு ஓடிய மோட்டார் சைக்கிள்..! வீதியால் நடந்து சென்றவர் மீது மோதி கோர விபத்து, ஒருவர் பலி, இருவர் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
தறிகெட்டு ஓடிய மோட்டார் சைக்கிள்..! வீதியால் நடந்து சென்றவர் மீது மோதி கோர விபத்து, ஒருவர் பலி, இருவர் ஆபத்தான நிலையில்..

கிளிநொச்சி நகரில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

A-9 வீதி வழியாக பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் நடந்து சென்றவரை மோதித் தள்ளி விபத்துக்குள்ளானது.

வீதயில் பாதசாரியாக பயணித்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர். உயிரிழந்தவர் கிளிநொச்சி விவேகாநந்தாநகர் பகுதியை சேர்ந்த 

செல்லப்பா சந்திரகுமார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 

விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை காயமடைந்த மற்றைய நபர் 

தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு