வடமாகாணத்தில் வர்த்தக நிலையங்கள், பொருட்கள் சேமிக்கும் கிடங்குகளில் விசேட சோதனை..! தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் சேகரிப்பு...

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் வர்த்தக நிலையங்கள், பொருட்கள் சேமிக்கும் கிடங்குகளில் விசேட சோதனை..! தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் சேகரிப்பு...

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை உண்டாக்க கூடிய இரசாயன பதார்த்தம் உள்ளமை உறுதியான நிலையில் வடக்கு மாகாணத்தில் வர்த்தக நிலையங்கள், சேமிப்பு கிடங்குகளில் விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

மத்திய பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தரவை தொடர்ந்து வடக்கில் உள்ள வர்த்தக நிலையங்கள், பொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு.

மாதிரிகள் பெறப்படுவதுடன் உடனடியாக அவை பரிசோதனைக்காக அனிப்பிவைக்கப்பட்டு வருகின்றது. இந்த நடவடிக்கை மாவட்ட மட்டத்தில் உள்ள பாவனையாளர் அதிகார சபைகளினால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு