இந்திய இழுவை படகுகளை கைது செய்யவேண்டாம் என கடற்படைக்கு உத்தரவா?

ஆசிரியர் - Editor I
இந்திய இழுவை படகுகளை கைது செய்யவேண்டாம் என கடற்படைக்கு உத்தரவா?

இந்திய மீனவர்களை கைது செய்யவேண்டாம். என தமக்கு எந்தவொரு உத்தரவும் வழங்கப்படவில்லை. என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழையும் எந்த படகையும் இலங்கை கடற்படை கைப்பற்றும் என இலங்கை கடற்படையின் பேச்சாளர் கப்டன் இந்திக டிசில்வா தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களை கைதுசெய்வதை தவிர்க்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதா ?அரசாங்கம் அவ்வாறான கொள்கை தீர்மானத்தை எடுத்துள்ளதா?

என்ற கேள்விக்கு தங்களிற்கு அவ்வாறான அறிவுறுத்தல்கள் எவையும் கிடைக்கவில்லை என கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு