யாழ்.கல்வி வலய மாணவர்களுக்கு இணையவழி மூலம் பரீட்சை நடத்தப்படும்..! பணிப்பாளர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வி வலய மாணவர்களுக்கு இணையவழி மூலம் பரீட்சை நடத்தப்படும்..! பணிப்பாளர் அறிவிப்பு..

யாழ்.வலய பாடசாலைகள் ஒரு வாரகாலம் முடக்கப்பட்டுள்ள நிலையில் இரு பாடசாலைகளில் மட்டும் பரீட்சை நடந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து இணையவழி மூலம் குறித்த பரீட்சைகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ்.வலய கல்வி பணிப்பாளர் பொ.ரவீந்திரன் தெரிவித்துள்ளதாவது, நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.வலயப் பாடசாலைகள்  சிலவற்றில் 

தொண்டமானாறு வெளிக்கள நிலைய பரீட்சைகள் இடம்பெற்றமை தொடர்பில் மேல் மட்டங்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் பரீட்சைகள் அந்தந்த பாடசாலைகளின் Viber, மற்றும் zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடாத்துமாறு பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு